Sunday, August 10, 2008

திருப்பிக்கொடு..


திருப்பிக்கொடு திருப்பிக்கொடு
என்னை திருப்பிக்கொடு
திருத்திக்கொடு திருத்திக்கொடு
என்னை திருத்திக்கொடு

மல்லியோடு சேர்த்து வைத்தயென்
மனதை திருப்பிக்கொடு
மஞ்சளாக்கி பூசிக்கொண்டயென்
மகிழ்ச்சியை திருப்பிக்கொடு

கண்களாளே கடத்திச்சென்றயென்
கண்களை திருப்பிக்கொடு
கைக்குட்டையில் ஒழித்துவைத்தயென்
கனவை திருப்பிக்கொடு

இதழ் சிரிப்பில் சிறையேடுத்தயென்
இதயம் திருப்பிக்கொடு
இருவிழியில் இருக்கிவைத்தயென்
இன்பத்தை திருப்பிக்கொடு

சின்னச்சிணுங்களில் சிக்கிக்கொண்டயென்
சிந்தனையை திருப்பிக்கொடு
சித்திரப் பேரழகில் சிதரிப்போனயென்
செந்தமிழை திருப்பிக்கொடு

மூக்குத்தியில் மூழ்கிவிட்டயென்
மூச்சை திருப்பிக்கொடு
முந்தானையில் முடிந்துவைத்தயென்
முகவரியை திருப்பிக்கொடு

கம்மலாக்கி தொங்கிவிட்டயென்
கற்பனையை திருப்பிக்கொடு
கால்கொலுசில் கட்டிவைத்தயென்
கவிதையை திருப்பிக்கொடு

வளையலோடு வளைத்துபோட்டயென்
வயதை திருப்பிக்கொடு
விரல்நடுவில் வீழ்ந்துவிட்டயென்
விடியலை திருப்பிக்கொடு

திருப்பிக்கொடு திருப்பிக்கொடு
என்னை திருப்பிக்கொடு
திருத்திக்கொடு திருத்திக்கொடு

ன்னை திருத்திக்கோடு


5 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு!

    ReplyDelete
  3. நன்றி பழமை பேசி

    ReplyDelete
  4. ஒ! இதுவேறையா !
    கவிதையாய் புகைப்படங்கள் எதிர்பார்த்தால்
    புகைப்படமாய் ஒரு கவிதை!!
    சினிமா பாட்டு போல மெட்டு வேற!!
    சூப்பர்!
    ஆமா ஏன் கமெண்ட்ஸ் எதையும் படிக்க முடியல சகா!

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...