Thursday, July 16, 2009

கண்கள் இரண்டால் .............

கண்களால் திருடும் ராட்சசி

கடலின் ஆழமோ உன்பசி?

காகிதத்தில் பட்டதும்

கசிந்துருகும் பேனா

மை போலஉன்

கண்களில் பட்டதும்

மெல்ல மெல்ல

உருகுது என் உயிர்

கவிதையாய் …..

காதலாய் ……..


அப்படி பாக்காதே

உன் பார்வையை விட

கொடிய ஆயுதம் இதுவரை

கண்டுபிடிக்கபடவில்லை

கொலையுண்டவனே விரும்பும்

ஆயுதம் அது !!




கண்கள் இரண்டிலும்

கத்தியை வைத்துக்கொண்டு

கரப்பான் பூச்சிக்கு பயப்படுவேன்

என்று நீ சொல்வதை

எப்படி நம்புவது ?!





எந்த கடையிலும்
கிடைக்காத காதல் - உன்
கடைக்கண்ணில் கிடைத்தது





பிரியமுடன் பிரபு ...




மறக்காம ஓட்டு போடுங்க


Friday, July 03, 2009

நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு...

--என் வலைபூவில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் அதை திறந்து பார்க்க கூட முடியாமல் இருந்த போது அமெரிக்காவில் இருந்து அன்புகரம் நீட்டி பிரச்சனையை தீர்வு செய்து உதவிய பழமைபேசி அண்ணனுக்கு நன்றி--



தொடர் பதிவு எழுத அன்போடு அழைத்தவர் குந்தவை அக்கா
அவரின் அன்பு அழைப்புக்காக இந்த பதிவு . அன்பினால் பதிவிடுகிறேனே தவிர ஆட்டோ அனுப்பிவிடுவார் என்ற பயத்தினால் அல்ல என்பதை இங்கே கூற கடமைபட்டிருக்கிறேன்



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் பெற்றோர்தான் பதில் சொல்லனும்
எனக்கு பிடிச்சிருக்கு , சும்மாவா பிரபு - ன்னா a master, a prince, nobleman
இப்படி பட்டியல் போகுதே


2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஞாபகம் இல்லை


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நல்ல மூடுல எழுதுனா ஓரளவிற்க்கு இருக்கும்



4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம்,ரசம் , காய்கறி கூட்டு
அசைவத்துல ஆட்டு குடல் ,தலைக்கறி(என் அம்மா சமையல்)



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.(குந்தவை அக்கா பதிலு)



6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
நமக்கு கடல், அருவி இரண்டும் ரொமப தூரம்
நான் காவேரி கரை மைந்தன் எனவே காவேரி ஆற்றில் குளிக்கவே பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சிரிப்பு, கண்கள்.



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எந்த முக்கியமான செயலை செய்யும் முன்பும் அதை பற்றி அறிந்தவர்களிடமும் , என் வீட்டு பெரியவர்களிடமும் நிறைய ஆலோசிப்பத்து
பிடிக்காதது - அடுத்தவர் மீது வைக்கும் அதீத நம்பிக்கை


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரிபாதின்னா???? ஓ மனைவியா??? இதெல்லாம் பெரியாவாகிட்ட கேட்கவேண்டிய கேள்வி . அவுட் ஆப் சிலபஸ் சோ நோ கமேண்ட்ஸ்



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஊர் மற்றும் உறவுகள்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு நிற கைலி, சிகப்பு மேலாடை


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். படிக்கும் போதும் , எழுதும் போதும் பாட்டு கேட்பதில்லை



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு


14.பிடித்த மணம் ?
மண் வாசனை , வெற்றிலை கொடிக்காலுக்குள் நுலைந்ததும் வரும் ஒருவித மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோரும் எழுதிட்டாங்க , அதனால யாரையும் அழைக்க வில்லை



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவுக வீட்டுகாரரை பற்றி எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்(பாவம் அந்த மனுசன்)
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் - கொஞ்சம் நல்லா விளையாட தெரிந்தது(கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது -குந்தவை)
அப்புறம் என் கணினியோடு மட்டும் சதுரங்கம் விளையாடுவது பிடிக்கும்(அப்பத்தான் தோற்ப்பது போல இருந்தால் ஆட்டத்தை கலைத்து புதிதாக தொடங்கலாம் ஹி ஹி ஹி)


18.கண்ணாடி அணிபவரா?
ஆம் ,ஆறு மாதமாக

மைனஸ் 0.5 பவர்
வயது 25
கன்னி ராசி
சித்திரை நட்சத்திரம் (பொண்னு பாக்கத்தானே கேட்டிக???)
நல்லா கேக்குறாய்கப்பா டீட்டெய்லு



19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
23 புலிகேசி மாதிரி நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும்.அன்பே சிவம் மாதிரி கருத்துள்ள படங்கள் பிடிக்கும் , தசாவதாரம் மாதிரி புதிய முயற்சிகள் பிடிக்கும் , மொத்ததுல ஓப்பனிங் சாங் , குத்துபாட்டு , சண்டை ,தன் புகழை பரப்புவதற்க்கு எடுக்கபடும் மசால நாயகர்களின் படங்கள் பிடிக்காது


20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க


21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்.


22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
கி.மு விவிலியக் கதைகள் - சேவியர்


23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இதுக்கெல்லாம் ஜோசியமா பாப்பாய்க ,, நல்ல படம் கிடைத்தால்................


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது – குழந்தையின் சிரிப்பு சத்தம்.
பிடிக்காதது – அழுகை சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கை


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... எதையும் கற்றுகொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நன்பன் என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் (நம்பிக்கை துரோகி)


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்பு கோபம் , இப்போ அந்த சாத்தான் அண்டர் கண்ரோல்



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் சொந்த ஊருக்கே சுற்றுலா மாதிரி போய் வருகிறேன்...


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.



31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவுட் ஆப் சிலபஸ் சோ நோ கமேண்ட்ஸ்



32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவி ராஜா அனுபவி


...........


எக்கோவ் .... பள்ளிகூடத்துல கூட யாரும் என்னய இம்புட்டு கேள்வி கேட்டதில்ல............................
கவனுச்சுக்கிறேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்




பிரியமுடன் பிரபு ...

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...