Tuesday, September 01, 2009

திருமண வாழத்து

வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே வானம்

வாழும் வரை வாழ்கவே


எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா

வானம் போல வாழனும் நண்பா

நீயும்... (கலைவாணி) கூட சேர

இன்பம் வந்து உங்களை சூழ....


(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)


கண்களாலே காதல் பேசி

வார்த்தையாலே வர்ணம் பூசி

பாசம் என்னும் கவிதையெழுதி......

நேசத்தோடு வாழனும் நண்பா .....


(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)


இதயத்திற்கு இதயம் மாற்றி

இன்பதுன்பம் இரண்டும் போற்றி

செல்வம், புகழ், நலம்

பதினாறும் பெற்று .....


(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)


ஆசை அறுபது நாட்கள் என்றும்

மோகம் முப்பது நாட்கள் என்றும்

பெரியவர் பேச்சை பொய்யாக்கி

வாழ்க்கை முழுவதும் வசந்த்தோட


(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)


ஜீனை அடுத்து ஜீலை பிறக்கும்

சூனியரும் சேர்ந்து பிறப்பான்

மலர் போன்ற பாதம் கொண்டு

மார்பில்தானே வந்து மிதிப்பான்


(வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்)





சமிபத்தில் திருமணம் செய்துகொண்ட நண்பன் கார்த்திகேயனுக்காக இந்த வாழ்த்து பதிவு

(காதல் வைரஸ் பட்த்தில் வரும் “வாழ்க வாழ்கவே வாழ்க என்றும் வானம் உள்ளவரை வாழ்க என்றும்” எனும் பாடல் மெட்டும் , பல்லவியும் – சரணம் மட்டும் நான் எழுதியது)



என்றும்

பிரியமுடன் பிரபு ....



You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...