Wednesday, January 20, 2010

புத்தகம்- நிலமெல்லாம் ரத்தம்(nilamellam raththam)



இது என் 50 வது
பதிவு







.
ஆசிரியர்: பா.ராகவன்
விலை: ரூ. 300

புத்தகம் படிப்பது எனக்கு பிடித்த விசயம் . பதிவர்கள் பலர் தான் படித்த புத்தகங்களை பற்றி எழுதுவது எனக்கு பிடிக்கும் , அதில் பல புத்தகங்களை குறித்து வைத்து வாங்கி படிப்பேன் . அதே போல நான் படித்த பின் அவற்றை பற்றி எழுதனும் என்று நீண்டநாளாக நினைத்துகொண்டிருக்கிறேன்.ஆனால் ஏனோ தட்டச்சு செய்து வைத்தவைகளை கூட பதிவிடாம
ல் விட்டுவிட்டேன்.இதுவே முதல் பதிவு
நிலமெல்லாம் ரத்தம்” – இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்ச
னை பற்றியது, இதை பற்றி நன்பர் ஒருவர் சொன்னார் ,பிறகு ஒருமுறை இந்தியா சென்ற எனது நன்பர் எனக்காக தேடி இந்த புத்தகம் வாங்கி வந்தார். படித்து வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை
அது ஏதோ இரு நாடுகளின் எல்லை பிரச்சனை என்று நினைப்பவர்களுக்கும், அப்பிரச்சனை பற்றி இதுவரை தெரியாதவர்களுக்கும்கூட தெளிவாக புரியும் வண்ணம் விளக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர். 703 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது . அதற்க்கு காரணம் உண்டு . இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை அரசியலும் மதமும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு ,இப்படி சேரக்கூடாத இரண்டு சேர்ந்ததால் வந்த விளைவு . எனவே இதை புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அந்த காலகட்ட அரசியல் நிலையையும் , மற்றும் இதில் சம்மந்தபட்ட யூத,கிருத்துவ,இஸ்லாமிய மதங்கள் பற்றியும் ஒரு தெளிவு வேண்டும். எனவே தான் ஆசிரியர் அந்த மதங்களின் வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் முடிந்த அளவுக்கு அலசியுள்ளார். அந்த மதங்களை பற்றி எனக்கு இதற்க்கு முன்பு அதிகம் தெரியாது

மோசோ தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்ட ,நீர் பிளந்து நடுவில் வெட்டாந்தரை உருவாக அதில் இஸ்ரவேல் புத்திரர்கள் நடந்து போனார்கள்என்று புராதன ஆவணத்தை சுட்டி காட்டி புத்தகம் தொடங்குகிறது .இப்படி புராதன காலம் ஆரம்பித்து கிட்டதட்ட 2005 வரையாக உலகின் பல முக்கிய நிகழ்வுகள் கொஞ்சமேனும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை ஒளிந்துள்ளது
அதை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் படிக்கவும்
ஒரு நாவலை போல (அவர் நாவலாசிரியரியரும்தான்) அழகாக சொல்லியுள்ளார்

இந்த புத்தகம் பற்றிய கிருஷ்ணா பிரபுவின் பதிவு http://online-tamil-books.blogspot.com/2009/03/nilamellam-raththam-pa-raghavan.html


மீண்டும் சந்திப்போம் பிரியமுடன் பிரபு ...

(ஓட்டு போட்டே ஆகனும்)



........................
........................
Hi priyamudanprabu,

Congrats!

Your story titled 'நிலமெல்லாம் ரத்தம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st January 2010 09:00:20 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172501

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish டீம்
................
................

ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி


.
.


Sunday, January 03, 2010

வெள்ளைத்தாள் சொல்லாதோ ஆயிரம் கவி ?!?



கனவில் வந்த கம்பன்
காதல் கவிதை
ஒன்றுதா
பரிசு தருகிறேன் என்றான்


கட்டுக்கட்டாய் தாள்கள் அடுக்கியும்

கம்பனை கவரவில்லை எதுவும்


கடைசி வாய்பாய்
கையில் ஒர் வெள்ளைத்தாள்

கற்பனை செய்தவாறே
கண்ணயற்ந்துபோனேன் நான்

கண்விழித்துp பார்க்கையில்
என் முன் பரிசு இருந்தது

சுற்றும் முற்றும் பார்த்தேன்

காணாமல் போயிருந்தது வெள்ளைத்தாள்


............................
............................

சில
வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய வாழ்த்துமடலில் கவிதைகள் இல்லை என் வருத்த பட்ட சிநேகிதிக்கு அடுத்த வருட வாழ்த்துமடலில் நான் எழுதியது கீழேபோன வருட வாழ்த்தில் கவிதைகள் இல்லையென்று வருத்தப்பட்டாய், ஆகவே இந்த வருடம்...

வாழ்த்துக்
கவியெழுத
பேனா
எடுத்தேன்அது
எழுத
மறுத்துவிட்டது
கவிதையை
போற்றி கவிதையா? – என்று

தங்கத்
தமிழை
தட்டி
யழைத்தேன்அது
தடுமாறி
சொல்லியது
தன்னிடம்
வார்த்தைகள் ஏதுமில்லை! – என்று

உண்மை
மனமிருந்தால்
வாழ்த்து
சொல்ல
ஏட்டில்
எழுத்தெதற்க்கு
வெள்ளை
தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!

.......



.......


என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..


சும்மா போனா எப்பூடி?!?? ஓட்டு போடுங்க..........


.

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...