மத்தியானம் வேள
ஒரு மோரு சாதம் போல
ஏ(ன்) மனசிலிறங்கும் கண்ணம்மா..
இந்த மாமன(னை) கட்டிக்க சம்மதமா ?!?.....(இந்த...)
காத்திலாடும் சேல - என்
மனசுக்கனுப்பும் ஓல
இது வேலையத்த வேல-ஆனா
காதலுங்குது மூள..... (இது..)
சின்னதா நீ சிரிச்ச - அடி
சீக்கிரம் மனச பறிச்ச
இத காதலுன்னு சொல்லி
என்ன கானா பாட வச்ச..... (இத..)
சத்தம் போடுதுந்தன் கொலுசு -அதில்
ஏறுதுந்தன் மவுசு
இந்த மாமா பாட்டு புதுசு
இன்னும் ஏன்டி இந்த ரவுசு
கால் கொலுசு பாட்டு பாடும்
காதில் கம்மல் ஆட்டம் ஆடும்
என் மனசு உன்ன தேடும்
நீ இல்லாங்காட்டி வாடும் .....
(நீ இல்லாங்காட்டி வா........டும்)
(சில ஆண்டுகளுக்கு முன் இரவு நேர பணியில் இருந்த போது உடன் வேலை செய்த நண்பர் ஒருவர் ஒரு கானா பாட்டுபோல பாட சொன்னார் , அப்போது அதற்காக முயற்சி செய்து ஒரு 20 நிமிடத்தில் இப்படி எழுதினேன் ,.... எப்படி இருக்கு???)
பிரியமுடன் பிரபு ...
நூல் : மனப்பத்தாயம்
ஆசிரியர் : யுகபாரதி
பதிப்பு : நேர் நிரை
விலை : 45 ரூ
அதில் இருந்து சில கவிதைகள்
***ஆதலினால்
வருகை எப்போதென
வாசலருகே
விழியிரண்டையும்
நட்டு வைத்து
பரிதவிக்கும் நெஞ்சை
பகல் கனவில் மேயவிட்டு
வராவிடில் காரணம் துழாவி
முகம் சோர்ந்து
கவலை கொண்டு
அலுவலை மறந்து
அண்ணாந்தபடியே
ஞாபகம் பேசி
ஏதோவொரு பிரமையில்
தேகமிழைத்து
என்போல் நீயுமாகி
விடக்கூடதென்றுதான்
சொல்லாமல் வைத்திருக்கிறேன்
உன்னிடம் கூட என் காதலை
***
கடுதாசி
ஒரே வாளி நீரில் உடம்பு அலசி
டிரங்குப் பெட்டிக்கடியில்
மடித்து வைத்த சட்டை மாட்டி
கிடைக்கும் போது சோறுண்டு
பராரியாய் நகரத் தெருக்களில்
உலவிக்கொண்டிருந்தாலும்
ஊரிலிருந்து அம்மா போடும்
கடுதாசிக்கு பதில்
சவுகரியமென்றுதான்
எழுத வேண்டியிருக்கிறது
***
மீதிய புத்தகத்துல படிங்க
பிரியமுடன் பிரபு
எப்போதுமே நான் ஒரு காதலன்
எனக்கான காதலி வரும்வரை
என்ன செய்வதென் காதலை
என எண்ணியபோதுதான்
அது நிகழ்ந்தது ......................
பிரியமுடன் பிரபு......