கங்கையம்மாளின் ஜாதகம்
மருத்துவரை பார்த்துவந்த ஒரு
மாலைவேளையில்
கங்கையம்மாள் வாரிசுகளின்
கட்டங்களை கணக்குப்பார்த்த
சோதிடர் சொன்னார்
"ஆச்சிக்கு ஆயுசு அவ்வளவுதான்
ஆறுமாசம் தாங்காது.." என்று
அவர் அறிந்திருக்கவில்லை
ஆறுவருடம் கழித்து -தன் சாவுக்கு
இந்த கிழவி ஒப்பாரி வைப்பாள் என்று ..
பிரியமுடன் பிரபு..
.