Saturday, January 24, 2009

காதல் மழை.......----- 24 / 01/2009-- 8.45 pm

...



" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "

" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "

" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "

" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......

Monday, January 19, 2009

மழை நேரம்.........................19/01/2009...




இது மயிலடும் நேரம்..



கருப்பு மேகமெல்லாம்
கால்நடையாய் நடந்து
வானத்துச் சாலையில்
வட்டமிடும் நேரம்.....


மழையெனும் மகள்
மண்ணுக்கு
முத்தமிடும் கோலம்


மழையிட்ட முத்தத்தில்
மண்ணெல்லாம் சிரிக்க.....
முத்தமிடும் கோலத்தை
முதன்முதல் காணும்
மலர்களும் நாணி
மோகம் கொண்டு ஆட.....


தாகம் கொண்ட
செடிகள் எல்லாம்
தண்ணீர் தாகம் தீர.....


வானம் பார்த்த பூமியை
நம்பி வாழும்
பொக்கைவாய் கிழவரும்
வேகம் கொண்டு ஆட


மொத்தத்தில் இது
பொண்ணான நேரம்
போகதே மழையே
எங்களைவிட்டு தூரம்




http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1536




Wednesday, January 14, 2009

வாழ்த்துக்கள் - 14/01/09 - 10.30 am


தை பிறந்தால்
வழி பிறக்குமாம்
அப்படியென்றால்
தினமுன் பிறக்கட்டும் ஒரு தை...
பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்றென்றும்
பிரியமுடன் பிரபு....


Sunday, January 11, 2009

இதனால் சகலமானவர்களுக்கும்...........(11/01/09-- 3.45 am)


நன்றி
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.....
வலைப்பதிவு நன்பர்கள் எனக்கு "பட்டாம்பூச்சி விருது" தந்துள்ளனர்.
("என்ன கொடுமை சார் இது"-- என்று தலையில் அடித்துக்கொண்டால் தடா,பொடா,வாடா போடா என்ற அனைத்து சட்டங்களும் அவர்கள்மீது பாயும்..தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி சிறையில் அடைக்கபடுவீர்கள்..ஜாக்கிரதை)

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று "பட்டாம் பூச்சி" விருதுகள்.
அவை
1. குந்தவை


3.தாரணிபிரியா

விருது கொடுத்து பாராட்டிய மூவருக்கும் நன்றி

நான் காகிதத்தில் கிறுக்கியவையெல்லாம் ஒருமூலையில் கிடந்து கரப்பான்பூசிகளுக்கு பலியாகிக்கொண்டிர்ருந்தன.
இப்போது இனையத்தில் ஏற்றியதில் பட்டாம்பூச்சி கிடைத்துள்ளது

இதை நானும் 3 பேருக்கு கொடுக்கிறேன்
குந்தவை,தமிழ்தோழி , தாரணிபிரியா இவர்கள் மூவரின் பதிவுகளில் அதிகம் நான்படித்திருக்கிறேன்..இவர்களுக்கு கொடுக்க ஆசை.ஆனால் அது ஏதோ அரசியல் கூட்டணிபோல் ஆகிவிடும்

எனவே

இவங்க கவிதைகள் அழகாக இருக்கும்..இவர் விஷாலின் தீவிர ரசிகை
உதாரணத்துக்கு ஒரு கவிதை....

செடியில் கண்டேன்
ரோஜா பூவுக்கு கீழ்
முட்களை
உன்னிடத்தில் உணர்ந்தேன்
முட்களுக்கு கீழ்
ரோஜா பூக்களை
உன் மீசையையும்
உதடுகளையும் தான்
சொல்கிறேன்!--இன்னும் இப்படி நிறைய காதல்ரசம் சொட்டும்

இவரது கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

இவரின் கதைகளின் நடுவே வரும் கவிதைகளை படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்

சரி,

இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)


விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும்
இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.


''''''''' கண்டிப்பா ஓட்டு போடனும்'''''''
(என்னது ?????????!!!! ஓட்டுக்கு 5000 ரூபாய் வேனுமா??? இதுஎன்ன திருமங்கலம் இடைத்தேர்தலா??????
பிச்சுபுடுவேன் பிச்சு..
இந்த அரசியல் வாதிக உங்களை நல்ல கெடுத்து வச்சிருக்காங்க)


பின்குறிப்பு : இங்கே கள்ள ஓட்டுக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்

வர்ட்டாஆஆஆ

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...