Thursday, October 20, 2011

தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

நண்பர்களே,
        உங்களுக்கு இலக்கியத்தில் (இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா? உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா? உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இங்கே நடக்கிறது.
    தமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
    அந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர். 

போட்டியின் விவரங்கள்: 

1. கவிதைப் போட்டி

2. கதைப் போட்டி

3. கட்டுரைப் போட்டி
 
4. நகைச்சுவைப் போட்டி
 5. அனுபவங்களைப் பகிரும் போட்டி

6. ஹைக்கூ போட்டி

7.புகைப்படப் போட்டி

8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி 

9. சமையல் போட்டி 

10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி 


போட்டி நிபந்தனைகள்:
          1.  நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

          2.படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.

          3.மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.

          4.தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.

         5.தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

        6.படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.

        7.படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.

          8.எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.

         9.படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். 

          10.படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com

         11.படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011

         12.போட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்கள் வேண்டுவோர் கீழே உள்ள லிங்க் பார்க்கவும்.
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011



இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!





You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...