Monday, July 04, 2011

காதல் பரிதவிப்பு




பச்சமண்ண பாதகத்தி
பத்தவச்சுட்டு போயிட்ட ..

உச்சிசாம வேளையில
உசிரு பத்தி எரியுதடி ..

ஊரும் தூங்குதடி..
உறவும் தூங்குதடி..
காக்கா குருவி கூட
கூடடஞ்சு போனதடி...
*கவர்மெண்டு* கரண்டு கூட
கட்டாகி போனதடி ...

இந்த
பாவிபய மனசுமட்டும்
பரிதவிச்சு நிக்குதடி..



(* - தமிழகத்தில் இருந்தபோது எழுதியது ..)

-
பிரியமுடன் பிரபு...
-



.

Friday, July 01, 2011

அரசு அலுவலகமும் இடைத்தரகர்களும்

***
திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ..நன்றி ..நன்றி ..

***
          என் திருமணத்தை பதிவுசெய்து சான்று பெற பதிவாளர் அலுவலகம் சென்றேன்.முன்தினமே அங்கு பணியில் இருக்கும் ஒருவரிடம் என் அப்பா விபரங்கள் கேட்டார். அதன்படி என் புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,மாற்று சான்றிதழ் (டிசி),ரேசன் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் கேட்டார்கள். அதுவும் ஒரிஜினலையும் காண்பிக்கவேண்டும். பெண்ணின் பெற்றோரும் நேரில் வரணுமாம் மேலும் முன்று சாட்சிகள் அவர்களின் அடையாள அட்டை,புகைப்படம். அதில் பத்தாம் வகுப்பு மார்க் சிட் மாற்று சான்றிதழ்(டிசி)  எல்லாம் சிங்கபுரிலேயே உள்ளது. ஆகையால் நகல் மட்டும் கொடுத்தேன் (கடவுச்சீட்டு ஒரிஜினல்) அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை. அவர்களுக்கு வேண்டியது

1 . திருமணம் நடந்ததற்கான சாட்சி
2 . என் வயதுக்கான சான்று
3 . என் இருப்பிடச் சான்று

பதிவுத்துறை இணையபக்கத்தில் விபரம் உள்ளது
(BUZZ -ல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி)

1 . MARRIAGE:

Wedding Invitation (or) Temple Marriage Receipts (or) Any proof of marriage solemnization

2. RESIDENCE:

Employee ID Card (or) Ration Card (or) Driving License (or) Passport or Visa

3. AGE

Birth Certificate (or) School/College Certificate (or) Passport / Visa

http://www.tnreginet.net/english/tel02.asp

இதன் படி என் திருமண அழைப்பிதழ் மற்றும் என் கடவுச்சீட்டு ஆகியவை மட்டுமே போதும் ஆனாலும் அந்த அதிகாரி பத்தாம் வகுப்பு மார்க் சிட்,மாற்று சான்றிதழ் (டிசி), என்றே ஒப்புவித்தார். என் படிப்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு என கேட்டால் "என் தொடர்பு இல்லையா.. உலகம் எங்கேயோ போய்கிடு இருக்கு இப்படி கேக்குறிங்க " என்று என்னவோ பேசினார் .சரி இனி பேசி பயனில்லை என்று அடுத்தநாள் அட்ரஸ்டேட் காப்பி கொடுத்து விண்ணப்பித்தேன்

Birth Certificate (or) School/College Certificate (or )Passport / விசா என்று இருக்க இவர்களோ 3 யும் கேட்கிறார்கள். நாயை பிடித்து கட்டிவைத்திவிட்டு புரோகிதம் செய்யும் புரோகிதர் நினைவு வந்தது எனக்கு. மேலும் மணமகளின் பெற்றோரும் வரவேண்டும் என சொன்னதால் முதல் நாள் சென்றபோது வெட்டியாக அவர்களும் வந்தார்கள் .அடுத்தநாள் கேட்டால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . வேறு பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பரிடம் விசாரித்தால் அவர் வேறு மாதிரி சொல்கிறார் .இப்படி அவர்கள் குழப்புவதாலும் , முகம்கொடுத்தே சரியாக பேசாததாலும் இடையில் இடைத்தரகர்கள் நல்ல கொண்டாட்டம் .

விண்ணப்பித்துவிட்டு வந்தபின் ஊருக்கு வரும் வரை நான் அதைப்பற்றி கவனிக்கவில்லை. பிறகுதான் ஏன் தப்பியிடம் கேட்டேன் ரூபாய் 1700 கொடுத்ததாக சொன்னான் . பதிவுசெய்ய வெறும் 200 ரூபாய் மட்டுமே அப்படியிருக்க எதற்கு 1700 அந்த இடைத்தரகர்கள் வாங்கினார்கள்?. சில படிவங்களை நகல் எடுத்தார்கள், விண்ணப்பங்களை நிரப்பிக்கொடுத்தார்கள், இரண்டு நாட்களும் சேர்த்தே சில மணிநேரங்கள் வேலை செய்திருக்கலாம் அதக்கு 1500 என்பது அநியாயம் அல்லவா?. உண்மையில் இது முழுவதும் இடைத்தரகர்களுக்குத்தானா ? அல்லது அதிகரிகளுக்குமா?, இங்குதான் என்றில்லை இதுபோல் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க போகிறவர்களிடமும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் படித்தவர்கள் தாங்களே படிவங்களை நிரப்பிக்கொண்டு சென்றாலும் அங்கேயும் இப்படித்தான் அதை வாங்காமல் அங்கேயே இருக்கு ஒரு நபரிடம் கொடுத்து அதை நிரப்ப சொல்கிறார்கள்.. அதற்க்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் .. :-((

** பிரியமுடன் பிரபு **

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...