Wednesday, November 26, 2008

கதைசொல்லப்போறேன்


அமைதியான இரவு
ஆழ்ந்த உறக்கம் கலைந்தப்பின்
உறங்க மனமின்றி
மொட்டைமாடிக்குச் சென்றேன்
வறுமையில் வாடியவன்
வயிறு போல – வானம்
வெறுமையாய் இருந்தது


கடையடைப்பு செய்யப்பட்ட
கடைவீதி போல – வானம்
கலகலப்பின்றி இருந்தது




தெருமுனையில் ஏதோ
சப்தம் கேட்க
தேடிப்போனேன்


என்ன ஆச்சர்யம்!!!
வானில் காணாததை
வழியில் கண்டேன்!


நிலவதன் தலைமையில்
நட்சத்திரங்கள் பேரணியாய்
வந்தன......
எங்கே செல்கின்றன???


தொலைந்த நட்சத்திரங்களை
மீட்ககோரி - மனுகொடுக்க
மாவட்ட அலுவலகம் செல்கிறதோ??


ஓசோன்படல ஓட்டையை
அடைக்கக்கோரி - மனுகொடுக்க
தலைமைச் செயலகம் செல்கிறதோ??


எங்குதான் செல்கின்றன??
பின்தொடர்ந்தேன்
ஒரு வீட்டினருகில்
பேரணி நிறுத்தப்பட்டது!
கதவு தட்டப்பட்டது!!


நீ வந்து கதவு திறந்தாய்!!!


நிலவும் நட்சத்திரங்களும்
ஒருசேர பாடின
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

..................................................................

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...