Monday, February 20, 2012

முதிர்கண்ணன் ...(100 வது பதிவு...)

முதிர்கண்ணன் ...



தங்கைக்கு மணமான பின்னே - எனக்குத்
தாரம் பார்க்கத் தயாரானோம்
ராகுவோ கேதுவோ எழரையோ
எதுவும்  பொருத்தமாகிப் போகல
செவ்வாயை வேறு சேர்த்துகிட்டு நிக்கிது....


முப்பதைத் தாண்டி வயசு
முழுமூச்சாய்  ஓடுது
முதிர்கன்னியா இருந்திருந்தா - சிலர்
கவிதைக்காவது கருவாகியிருப்பேன் - கிரகம்
ஆம்பிள்ளையா பிறந்திட்டேன்
அந்த தகுதியையும் இழந்திட்டேன்




****
முதிர்கன்னிகளுக்காக நிறைய கவிதைகள் இருக்கு..ஏனோ சரியான வயதில் மணம் ஆகாத ஆண்களுக்கு என்று கவிதை அதிகம் எழுதப்படுவதில்லை.. சாதகம் உள்ளிட்ட பல காரணங்களால்  திருமணம்  தள்ளிப்போனாலும் பெரும்பான்மை ஆண்களுக்கு திருமணம் தள்ளிபோக குடும்ப பொருளாதார நிலையே முக்கிய காரணமாக இருக்கு. அந்த நண்பர்களுக்காக இந்த கவிதை..
****
சச்சின் அடிப்பாருன்னு பார்த்தேன் அடிக்கல..:(
இது என்னுடைய 100 வது பதிவு.. :)



ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..


****
பிரியமுடன் பிரபு......

****

 

Tuesday, February 14, 2012

காதலர் தின நல்வாழ்த்துகள்..(புகைப்படங்கள்)



காதலர் தின நல்வாழ்த்துகள்....


பிரியமுடன் பிரபு......

Friday, February 10, 2012

Wednesday, February 01, 2012

"புகழ்" "புகழ்" "புகழ்"


புகழ்
_____________________________

மயக்கும் விழிகொண்ட 
மாது தராத போதை..

மானிட்டர் முதலான 
மது(க்)கள் தராத போதை..

மழையாய் அல்ல வெறும் 
சாரலாய் வந்து விழுந்த 
வார்த்தைகளில் கிட்டிய போதை..

எல்லோருக்கும் உள்ள போதை..
எனக்கும் இருக்கும் போதை..
"புகழ்"  "புகழ்"  "புகழ்" 

_____________________________

பிரியமுடன் பிரபு ...



,

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...