Friday, June 01, 2012

என் பெயர் இறைவன்




அந்தக்  கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவறே  வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம் 

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

2 comments:

  1. ஹா..ஹா.. கடவுள் பூமி வந்தால்...உண்மை தான் கடவுளை ஒவ்வொருவரும் என் மதத்துக்காரன் என்று சொல்ல சொல்லி வற்புறுத்தி இப்படித்தான் செய்திருப்பார்கள். நல்ல கற்பனை அண்ணா.

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...