Monday, February 23, 2009

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

சென்ற ஆண்டு விடுமுறையில் ஊருக்கு சென்ற போது "பாட்டிலொடுதான்" வரவேண்டும் என்று நன்பர்கள் (வயது 25இல் இருந்து 30க்குள்) சொல்லியிருந்ததால் நானும் வாங்கிச் சென்றேன்
......
அங்குதான் அதிர்ச்சியே ! ஆரம்ப காலத்தில் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என ஆரம்பித்த குடி பழக்கம் பிறகு மூன்று மாதம் ஒருமுறை , மாதம் ஒருமுறை என முன்னேறி (!!!!) இப்போ வாரம் வாரம் சனி ,ஞாயிறு என்று வந்து விட்டது

குடியென்றால் எப்படி !!!?? காலையிலேயே ஆரம்பிக்கிறது , இறங்க இறங்க ஏறுவது । கூடவே புகைவண்டி அதுதாங்க சிகரெட்। ஆரம்பத்தில் அளவாக இருந்தது இப்போது அவர்களை அடிமையாக்கிவிட்டது
இதுக்கு என்ன கரணம் ??

** ஒன்று - நன்பர்கள் என்ற பெயரில் பழகுபவர்கள்- பத்து பதினைந்து வயதுகளில் அவர்கள் பழகும் பலரிடம் இருந்து இது வருகிறது . குறிப்பாக அவர்களை விட வயதில் மூத்தவர்களிடம் பழகும் போது அவர்களையே ஒரு ஹீரோவாக எண்ணி அவர்களிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் இவர்களிடமும் பரவுகிறது

*** இரண்டு - சினிமா நாயகர்கள்
இந்த மகான்கள் (!!!) பங்கு இதில் அதிகம் படம் முழுக்க சிகரெட் வாயுமாக அலைவது , சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பது , ஸ்டைலாக பிடிப்பது , காலரில் இருந்து சிகரெட் எடுப்பது இப்படி செய்யும் அந்த புன்ணியவான்களின் நடிப்பில்(!!!) மயங்கும் ரசிகன் சிகரெட், மது இல்லையென்றால் ஏதோ கவுரவ பிரச்சனை போல நினைக்கிறான் . நாமும் முயற்ச்சிப்போமே என்று ஆரம்பத்தில் தொடங்கி பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்...
அதிலும் இப்போ ஒருத்தன் இருக்கான் எல்லா படத்திலும் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கேள்வி கேட்க்கும் அப்பாவை திட்டுவது , ஏதாவது அழகான(இது முக்கியம்) பெண்ணை பார்த்தவுடன் "எலும்பு" துண்டை பார்த்த "நாய்' போல பின்னாடியே செல்வது (பின்னனி இசை உபயம் யுவன்) ... இவனையெல்லாம் பார்த்து வளரும் சிறுசுகள் வாழ்வை இப்படித்தான் வாழனும் என நினைக்கின்றன,
(ரசிகர் மன்றத்துல இருந்து ஆட்டோ வரலாம்..........)
" சினிமாவில் எவ்வளவோ நல்லகருத்துகள் உள்ளன அதையெல்லாம் பின்தொடர்கிறார்களா ??? " - என்று கேட்கலாம்
"நல்லது என்பது ஊட்டசத்து போல உடனே "ஆம்ஸ்" வளர்ந்து விட்டதா என பார்க்க கூடாது, மெல்ல மெல்லத்தான் பலன் கிடைக்கும் ,அதிகம் எடுத்து கொண்டாலும் கூட..."
" கெட்டது என்பது விசம் போல உடனே செயலாற்றும் , முதலில் உடலை குளிரச்செய்து பின்பு உயிர் நீக்க செய்வது விசம் , அதுபோலவே இந்த போதை வஸ்த்துகளும் முதலில் மகிழச்செய்து பின்பு துன்பம் கொடுக்கும்।"
போதை பழக்கம் உள்ளவர்கள் தாங்கள் ஒரு அடிமை என்பதை உணரவேண்டும் அப்போதுதான் அதிலிருந்து விடுதலையாவது பற்றி யோசிக்க முடியும் , இல்லாவிட்டால் மிக கடினம்
யாரையும் குறைசொல்ல வரவில்லை। என் சகாக்கள் சிகரெட் , மதுவால் அவர்களும் கெட்டு குடும்பத்துக்கும் பிரச்சனையாகி இருப்பதை பார்க்கும் பொழுது ஏற்ப்பட்ட ஆதங்கம் தான் இது , குடிப்பது அவரவர் உரிமை அதில் தலையிட நான் யார்?!?!?!


ஒரு கவிதை ;
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே !
மரண ஊர்வலத்திர்க்கு மலையாகிப்போன பூக்களே !!
மதியை மதுவுக்கு விற்ற என் சகாக்களே !!!
கொஞ்சம் கேளுங்கள்
ஆடுற ஆடுற தண்ணிய போட்டுட்டு ஆடுற ஆடுறடா
வெளிச்சத்தில் தொலைச்சத இருட்டுல தேடுர
வாழ்க்கை உன்னதடா
வாழ்க்கை என்பதே பெரும் போதை - அதில்
ஏண்டா இந்த குடி போதை
பிராந்திய குடிச்சுட்டு
வாந்திய எடுத்துட்டு -- ( ஆடுற ....)।
குருட்டு குதிரையை நம்பி நீயும்
பயணம் போகாதே
ஓட்டை படகு ஒழுங்காய்த்தானே
ஊர் போய் சேராதே
தன்னை மறப்பது இன்பத்தின் உச்சம்
தன்னை இழப்பதில் எது மிச்சம் ???

( மப்புல இருந்தாலும் சரி கண்டிப்பா ஓட்டு போடனும்)

Wednesday, February 18, 2009

யூத்புல் விகடனில் என் கவிதை........






வாங்க மக்களே வாங்க

நான் சொல்லப்போறத அமைதியா கேளுங்க

அதாவது நான் எழுதின கவிதை யூத்புல் விகடனின் இனைய இதழில் வெளியாகியுள்ளது


இங்கே சென்று பார்க்க



இன்று மட்டும் இங்கே



இது ஏற்கனவே என் பதிவில்
(எதுக்கு சரண்யா படம்???.........
ஹி ஹி சும்மாத்தான்..
படிக்கவர்ர யூத் எல்லாம் பார்த்துட்டு போகட்டும் )





Monday, February 16, 2009

வாய்கால்

..16/02/09…. 4 am

வாய்கால் கரைமேல
வயசுபொண்ணு நிக்கையில
தன்ணிக்குள்ள மீனுக்கெல்லாம்
காய்ச்சல் வந்து கஷ்டப்படும்
தரையில நிக்குற தாமரையே
தண்ணிக்குள்ள வாயேண்டி
சாதி சண்டையில சாவு பல
பார்த்த வாய்கால் !
மதச் சண்டையில் மரித்த பிணங்களை
சுமந்த வாய்கால் !
கட்சி சண்டையில காவு கொடுத்ததால்
சிவந்த வாய்கால் !
கங்கையே வந்து கலந்தாலும் - இதன்
கறைதீர்ந்து போகாது..
கவிதையே... நீ குளிச்சு - இதை
கங்கையா மாத்தேன்டி
.....
மனசாட்சி : ஏற்க்கனவே "கூவமும் குளியலறையும்" படிச்சுட்டு குந்தவை அக்கா கும்மியடுச்சாங்க இப்ப என்ன செய்ய போறாங்களோ..... ம்ம்ம்.....ஆரம்பிங்க.......
.....

Sunday, February 01, 2009

சேலையே ! சேலையே !. ---- 02/02/2009.... 1.04 am

.....



சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

என்னவளை
பத்திரமா பாத்துக்கோ....
வேர்வைத்துளி வெளிவந்தாலும்
வீணாகாம சேத்துக்கோ....

புடவைகட்டிய பூங்குயில் - இவள்
பூந்தோட்டம் போனால்...
பூக்களெல்லாம் பொறாமையில் பொங்கும்
இவளுக்கு
புடவையாக மாட்டோமா ? - என்று
புலம்பி ஏங்கும்........
முந்தானை நுனியை
முள்ளால் குத்தி - தன்
ஏக்கத்தைத்  தனிக்கும்
சேலையே ! சேலையே !
என் தங்கத் தாமரையை
தழுவி நிற்க்கும் சேலையே !

மூடாத இடம் பார்த்தே
மூச்சு முட்டி - நா(ன்) நின்னேன்
முழுசா கட்டிக்கொண்ட
மச்சமுள்ள சேலையே

அவ மேனி ரகசியத்த
யாருக்கும் சொல்லாதே
காத்தே கேட்டாளும்
கடுகளவும் காட்டாதே....!
...................

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=1020

..............
படிச்சாச்சா.......
பிரியாமணி-யை பார்த்து ஜொள்ளு விட்டாச்சா....
சரி மரியாதையா ஓட்டு போடுங்க
..............

Saturday, January 24, 2009

காதல் மழை.......----- 24 / 01/2009-- 8.45 pm

...



" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "

" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "

" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேறயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை .
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிறது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொட்டு விட்ட சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுறியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "

" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை
................
பதிவிட்ட 4 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த மின்னஞ்சல்
Hi priyamudanprabu,Congrats!Your story titled 'காதல் மழை.......-----' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th January 2009 04:00:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/28164
வாக்களித்த அனைவருக்கும் நன்றி
.....

http://www.tamilkurinji.com/ilakkyam_detail.php?id=976
......

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...