Showing posts with label english vinglish. Show all posts
Showing posts with label english vinglish. Show all posts

Monday, October 15, 2012

இங்கிலீஷ் விங்க்லிஷ் - மாற்றான் - சச்சின் - புரட்டாசி இன்னும் வரல


()

கடந்த வாரம் கேபிள் சங்கர் சிங்கை வந்து இருந்தார் . நான்,குழலி&கோவி அண்ணன் மூவரும்  அவரை லிட்டில் இந்தியாவில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம்.  பிறகு எல்லோரும் இங்க்லீஷ்-வின்கிலிஷ் பார்க்க சென்றோம் . தமிழ் தவிர்த்து மாற்று மொழி படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் இணையத்தில் மட்டுமே. ஹிந்தி  தெரியாது என்பதால் சப்டைட்டில்-லே துணை என்று நம்பி புறப்பட்டேன். படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே  சப்டைட்டில்-லோடு பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாத அளவிற்கு படம் பிடிச்சு இருந்துச்சு.கண்டிப்பா பார்க்கலாம். குறைந்த கதாபாத்திரங்கள்தான், பெரிய  திருப்பங்கள் இல்லாத திரைக்கதைதான் ஆனாலும் சலிப்பில்லாமல் பார்க்க முடிந்தது . கடைசி காட்சியில் ஸ்ரீதேவி அதிரடி ஆங்கிலம் பேசி அதிரவைக்காமல் அந்த குறைந்த காலத்தில் கற்றுகொள்ளக் கூடிய ஆங்கிலத்தில் பேசும்படி இருப்பதை பாராட்டலாம்..


()
மாற்றான்

என் நண்பர் "மாற்றான்" போகலாம் வா என்றார், நான் வரலேனுதான் சொன்னேன் ஆனால் "ஏற்கனவே நுழைவுச்சீட்டு எடுத்தாச்சு வேற வழியில்ல வந்துவிடு" என்று சொன்னதால் போனேன். பயபுள்ள எதோ பழைய பகைய மனசுல வச்சு பழிவாங்கிட்டான். வடிவேல் பாணில சொன்னா படம் "ஒப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு ப்பினிசிங் சரியில்லையேப்பா".  முதல் ஒரு மணி நேரம் பரவாயில்லை (சில வசனங்கள் சிரிக்கும் படி  இருந்துச்சு..). இரண்டாம் பாதி "எப்படா முடியும்" என்று இருந்தது.

மனுஷ்யபுத்திரன்  முகநுலில்
Manushya Puthiranநேற்று ’ஒஸ்தி’ படம் திருட்டு டிவிடியில் பார்த்தேன். டைட்டில் கார்டு போடும்போது ‘ இந்தப் படத்தில் நடித்த மிருகங்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஒரு கார்டு வந்தது. நான் ஒரு மிருகமா பிறந்திருக்கக்க் கூடாதா என்று முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை தோன்றிக்கொண்டே இருந்தது.

மாற்றான் படம் துவங்கிய போதும்  ‘ இந்தப் படத்தில் நடித்த மிருகங்கள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஒரு கார்டு வந்தது. ...:)

கஜல் அகர்வால் :  



கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா(பாடல் வரி)
 ஹி ஹி  உங்கவீட்டு எங்கவீட்டு அழகில்ல அம்புட்டும் அழகு... :)


()

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து அடுத்த மாதம் யோசிக்க போவதாக இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.-செய்தி

வேண்டாம் தலைவா நீ விளையாடிகிட்டே இரு நாங்க ரசிச்சுகிட்டே இருக்கோம்...:)

ஆனாலும்...

அடுத்த மாதம் நான் பங்கேற்க உள்ள போட்டிகளின் போது, ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்க உள்ளேன். 39 வயதை கடந்துவிட்ட நிலையில் இன்னும் என்னால் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தில் எனது உடல் மற்றும் மனதின் பலத்தை பொறுத்தே, ஓய்வு பெறுவது குறித்த முடிவு எடுக்க உள்ளேன். 

இதுவும் நியாயம்தான்...:)  ரசிகர்கள் மனசுத்தான் ஏற்றக்கொள்ள சிரமப்படும்... இப்போதைக்கு சேம்பியன் லீக் போட்டிகளில் அவர் ஆட்டத்தை ரசிப்போம்...


()

புரட்டாசி முதல் வாரம்..அப்போ அம்மாவிடம் தொலைபேசிக் கொண்டிருந்தேன் .

அம்மா : என்னப்பா சமையல்

நான் : சிக்கன் குழம்பும்மா ..

அம்மா : ஏம்பா புரட்டாசி மாசம்ப்பா ..

நான் : ஓ ! புரட்டாசி வந்திடுச்சா ?

அம்மா : 7 தேதி ஆச்சுப்பா...

நான் : அப்படியா ! இந்தியாவுக்கு சீக்கிரமா  வந்திடுச்சு போல இன்னும் சிங்கப்பூர் -க்கு வரல...:)

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...