எனக்கு பிடித்தவர்கள் (அ) என்னை கவர்ந்தவர்கள்- யாரை பற்றி எழுதுவது என்று சிந்தித்து(?) கொண்டிருந்த சமயத்தில் என்னை தொடர்புகொண்டு ""என்னை பற்றி எழுத வேண்டாம்,எனக்கு புகழ்ச்சி பிடிக்காது "" என்று தாழ்மையுடன் கேட்டுகொண்ட "பதிவுலக சூப்பர் ஸ்டார்" " , "வருங்கால முதல்வர்" , "கருப்ப்பு சூரியன்" அண்ணன் ஜமால் அவர்களை பற்றி எழுத முடியாமல் போனதற்க்கு எனக்கு வருத்தம்(ஹ ஹா)
எனக்கு பிடித்தவர் மிகவும் கவர்ந்தவர் என் அப்பா
எங்கள் வாழ்வுக்காகவே வாழ்பவர், ஏழை குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் மூத்த மகனாக பிறந்து, 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்காமல் பத்து வயதில் இருந்தே விவசாய வேலைகள் செய்தார்,தான் படிக்காவிட்டாலும் தன் மகன் படிக்கனும் என்று விரும்பினார் , நான் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சென்ற போது கவுன்சிலிங்கில் வருடம் 2500என்றார்கள் , ஆனால் கல்லூரியில் 9000ஆயிரம் என்றார்கள்,அந்த நேரத்தில் தினம் ரூ70க்கு கூலிக்கு செல்லும் அவருக்கு இது பெரிய தொகை,எப்படி கட்டுவது என்று கலக்கத்தில் இருந்த போது "படிப்பு வேண்டாம் வேலைக்கு போகட்டும்" என்று பலரும் சொன்னபோது ,எப்பாடுபட்டாவது என் மகனை படிக்க வைப்பேன் என்று படிக்க வைத்தார். எங்களுக்கு சிறு கய்ச்சல் என்றாலும் மருத்துவமனைக்கு அழைக்கும் அவர் தனக்கு என்றால் ஒரு மாத்திரை போதும் என்பார்
நான் ஆணாக இருப்பாதாலோ என்னவோ சிறு வயது முதல் இன்றுவரை என் தாயைவிட என்னை அதிகம் புரிந்து கொண்டவர் அவர்தான் , சில வீடுகளில் பார்த்துள்ளேன் , தந்தை வரும் சப்தம் கேட்டாலே வீடே அமைதியாகிவிட்டும் , ஆனால் நான் என் தந்தையிடம் பயந்ததில்லை , மரியாதைதான் உண்டு , அவர் வந்தால் உட்கார்ந்து இருக்கு நாற்க்காலியைவிட்டு எழுவது போன்ற போலி மரியாதையை நான் தந்ததில்லை அவரும் எதிர்பார்த்தது இல்லை
காப்பியங்களிலும் சினிமாவிலும் தாய்க்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போற்றபடுகின்றார்கள். இளம் வயதில பல கனவுடன் இருக்கு ஒரு ஆண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு மீதிவாழ்நாள் முழுக்க தன் வாரிசுகளுக்காகவே உழைக்கும் தந்தையை அதிகம் போற்றியதில்லை
சிங்கப்பூர் வந்து சம்பாரித்து ஊரில் வீடுகட்டி முடித்த பின் ஒருநாள் என் தந்தையிடம் "உங்கள் நிறைவேறா ஆசை என்று ஏதாவது இர்ருந்தால் சொல்லுங்கள் அதை நான் செய்கிறேன் " என்று நான் கேட்க
" எனக்கு என்னப்பா வேனும் நீங்க நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும்" என்றார்
அதுதான் என் அப்பா...
என்றும்
பிரியமுடன் பிரபு . .
.
.
.