(ஒரு மீள் பதிவு)
("காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாககுறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)
பல்லவி:
கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்ட பின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......
என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............
நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகmமாகுமே..........
(கனவா...?)
சரணம் 1:
மேகங்கள் ஒன்று கூடியே
மழைப் பூவைத்தூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களைப் போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட
மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்
மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
(கனவா......)
சரணம் 2:
உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......
வசந்தத்தின் பூப்போல
வழியெங்கும் உன்வாசம் - நீ..
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்
ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)
************************************
மேலும் சில
**பார்த்த முதல் நாளே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 2***சுட்டும் விழிச்சுடரே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 3
****கண்டேன் கண்டேன்- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 4
*********
பிரியமுடன் பிரபு ...







