Monday, November 01, 2010

சினிமா மெட்டுக்கு என் பாட்டு..


(ஒரு மீள் பதிவு) 
("காக்க காக்க" படத்தில் இருந்து "ஒன்றா இரண்டா ஆசைகள்" என்ற பாடலின் வரிகளூக்கு பதிலாக


குறிப்பு: சூர்யா,ஒரு மழை நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஜோதிகாவை பார்த்ததை(சரணம்1) திருமணம் முடிந்தபிறகு ஒருநாள் மழையில் நனைந்து வீட்டுக்கு வரும்போது நினைத்துப்பார்த்தல்(சரணம்2)

பல்லவி:

கனவா? நினைவா? என்றுதான்
எண்ணம் தோன்றுதே......
ஏனோ தெரியல..
அன்பே.. உன்னை கண்ட பின்
உலகம் மறந்ததே
எதுவும் புரியல.......

என்னருகில் ...............
நீயிருந்தால் ...................
நரகம்தான் சொர்க்கமாகுமே............

நீயின்றி ........
நான்வாழ்ந்தால் .........
சொர்க்கம்தான் நரகmமாகுமே..........
                                                               (கனவா...?)

சரணம் 1:

மேகங்கள் ஒன்று கூடியே
மழைப் பூவைத்தூவியே வாழ்த்திட
பனிக்கால பூக்களைப் போலவே
உன் தேக அங்கங்கள் நனைந்திட

மழை நீராய் நான் மாற
வரம் கேட்டு மனுபோட்டேன்
மழைத்துளியாய் நான்தங்க-உன்
மார்புக்கூட்டில் இடம்கேட்டேன்

மரக்கிளையில் தங்கிய ஒருதுளி - அது
தரையில் விழுந்து சிரிக்குதே
மழை நின்றதும்.....
நீயும் சென்றதும்....
தனிமை கொன்..றதும்....
                                                 (கனவா......)

சரணம் 2:

உன் ஈரக்கூந்தலை நீ துடைத்திட
என் மனமும் மழையினில் நனையுதே..
நீ ஓரப் பார்வைகள் பார்த்திட
ஒரு கோடி மின்னலும் மின்னுதே......

வசந்தத்தின் பூப்போல
வழியெங்கும் உன்வாசம் - நீ..
வாய் பேசா தருணாங்களில்
உன்வளையல்கள் அதுபேசும்

ஒருநாள் கண்ட வானவில்லை
மறுநாள் தேடி காத்திருந்தேன்
வழியில் வந்ததும்......
வணக்கம் சொன்னதும்.....
வயதை தின்றதும்......(கனவா?......)

************************************

மேலும் சில
**பார்த்த முதல் நாளே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 2


***சுட்டும் விழிச்சுடரே- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 3

****கண்டேன் கண்டேன்- சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்- 4


*********
பிரியமுடன் பிரபு ...

Saturday, October 23, 2010

கடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்



Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது . 
-கலில் ஜிப்ரான்

              கலில் ஜிப்ரானின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனிமையில அவற்றை வாய்விட்டு சத்தமாக படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. . சில கவிதைகள்

என் பழைய மொழி-


நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்.. 

என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"


அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."


எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"


ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..


இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்.. 

நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,

"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..


ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,

"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..


நான் கோபத்துடன்,


"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..


ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..


இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..


ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..


ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..


நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!


(மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்)
..............................


நரியின் பசி


நரி ஒன்று
காலை வேளையில்
தன் நிழலைக் கண்டது..

"இன்று நான்
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
என்று எண்ணிக் கொண்டது..

பகல் முழுவதும்
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..
நண்பகலில்
தன் நிழலை மீண்டும் கண்டது..
"ஒரு எலி போதும் எனக்கு.."
என்ற முடிவுக்கு வந்தது..!!
..........


கடவுளும் சாத்தானும் 

ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.


கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"


சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"


சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,

சீச்சீ,

எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"


கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,


அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"


சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது. 



பிரியமுடன் பிரபு … 

.

Saturday, October 09, 2010

சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)






















 

அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க


மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று  நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம்

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி

மணற்கேணி குழுவின் வலைப்பூ

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

Photobucket

....
நன்றி ஆ.ஞானசேகரன்

(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...

.

Tuesday, September 21, 2010

சாதியும் சாமியும் ..





உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை
காவலுக்கு நிக்குதய்யா


 பிரியமுடன் பிரபு ...


Monday, September 13, 2010

சாகாவரம் -நூல் (மரணத்தை நோக்கிய பயணமே வாழ்வு)


நூல் : சாகாவரம்
ஆசிரியர்: வெ.இறையன்பு இ.அ.ப
பதிப்பு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

      வெ.இறையன்பு அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை நூல்கள் வாயிலாகவும் , ஒலிபுத்தகமாகவும் படித்து/கேட்டுள்ளேன் . பிறகு அவரின் “ஆத்தங்கரை ஓரம்” நாவலை அவரின் பெயருக்காகவே வாங்கி படித்தேன்.மிகவும் பிடித்து போனது அவரின் எழுத்து

       “நான் முழுநேரப் படைப்பாளியோ தீவிரப் படைப்பாளியோ அல்ல; மக்கள் மொழியைப் பேசும் சாமானிய வழிப்போக்கன் மட்டுமே.'' – என்று ஒரு நக்கிரன் பேட்டியில் கூறியுள்ளார் . அது மிக மிக சரி . ஒரு ஞானிபோலவோ அல்லது ஆசிரியர் போலவோ நம்மைவிட்டு தள்ளி இல்லாமல் மிக நெருக்கமாக ஒரு நண்பனை போல இருக்கும் அவரின் நடை(இப்பெல்லாம் புரியாம எழுதுனாத்தான் இலக்கியமுனு சொல்லுறாக)

சாகாவரம்
     இந்த நூல் விமர்சனம் கவிஞர் இரா.ரவி எழுதி ஒரு குழும மின்ன்ஞ்சல் மூலம் எனக்கு வந்த்து( http://tamilparks.nsguru.com/-f16/---t230.htm) .  மரணம் மீது எல்லோருக்கும் பயம் இருக்கும் , ஆனாலும் நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம் தானே.. ஆனால் அதை வென்று மரணமில்லா பெருவெளியை கண்டு சாகாவரம் பெற நினைக்கும் ஒருவனின் பயணமே இந்த நூல்.

     நாயகனின் பெயர் “நசிகேதன்” – (யாராவது இதன் பொருள் என்னானு தெரிந்தல் சொல்லுங்க .) . 3 மாதத்தில் 4 நண்பர்கள் கபீர், பார்த்திபன், கோபி ரூப் குமார் மரணம் அவருக்குள் மரணபயத்தை கொடுக்கிறது. மரணம் பற்றி அறிந்துகொள்ள கொல்லிமலை செல்கிறார் , அங்கே ஒரு ஞானியைடம் கிடைக்கும் ஓலைசுவடிகளை படித்து அதன் மூலம் மரணமில்லா பெருவெளியை தேடி பயணம் செய்கிறான் . பல இடங்களை , பல மனிதர்களை தாண்டி ஒரு நாள் அந்த மரணமில்லா பெருவெளியை அடைகிறான் . அவனுக்கு முன்பே பலர் அங்கு இருக்கிறார்கள் .

      “நம் வாழ்வு என்பதே மரணத்தை நோக்கிய பயணம்தான் , இயங்குவதுதான் வாழ்வு, தேங்குவது சாவு “ – இதைத்தான் சொல்கிறது இந்த நூல். பல தடைகளைத்தாண்டி அவன் கண்ட அந்த பெருவெளியில் மரணம் இல்லை , எங்கு மரணம் இல்லையோ அங்கு வாழ்வும் இல்லை . ஒவ்வொருவரியும் த்த்துவம் போல் எழுதுவது இவரின் சிறப்பு. கண்டிப்பா படிச்சி பாருங்க ஒரு புது அனுபவமாக இருக்கும்

நூலில் இருந்து சில வரிகள்

“பல நேரங்களில் நம் அறியாமையைக் கூட நம்முடையது என்பதால் நாம் பத்திரப்படுத்தி விடுகிறோம்”

“பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும் போது , நாம் கொட்டையை சபிக்கிறோம் . அந்த விதையால்தான் பழம் கிடைத்த்து என்பதை உணராமல்”

“சொர்க்கம் என்பது வசதிகளை பெருக்கிக்கொள்வதில் இல்லை , தேவைகளை குறுக்கிக்கொள்வதில் உள்ளது”

“மனம் நிறையும் போது மண் கூட உண்டால் செரித்துவிடுகிறது”
“உணவின் ருசி பசியை பொறுத்தே அமைகிறது”

“வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய வடிவத்தில் வருகிறபோது மரணம் கூட திருவிழா போல”

“பழகியவர்களின் அன்பு சம்பளம் போல , பழகாதவர்களின் அன்பு புதையல் போல”

“ அழமுடியாத இடத்தில் சிரிக்கவும் முடியாது; அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்”



பின் குறிப்பு : இது விமர்சனம் அல்ல பகிர்வு


*******
(15ம் தேதி பிறந்தநாள் காணும் மருத்துவர் தமிழ்த்துளி தேவன்மாயம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்  
(எத்தனை வயது என கேட்க கூடாது)
*******

பிரியமுடன் பிரபு…

.


You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...