Tuesday, April 12, 2011

திமுக கூட்டணியை வீழ்த்துங்கள் !

Thanks to Govi kannan

http://govikannan.blogspot.com/2011/04/blog-post_12.html

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தேற்க்கடிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் வெளிப்படையானவை.




1. த.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரையில் பிடிபடாமல் இருக்க ஆளும் அரசு காட்டிவரும் அலட்சியம்.

2. மதுரை தினகரன் மூன்று ஊழியர்கள் கொலையில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காண அரசு முயற்சிக்காதது. கொல்லப்பட்டவர்கள் குடும்பம் இழப்பை மறக்கும் முன்பே 'இதயம் இனித்தது கண்கள் பணித்தன" மிகக் கொடுரமான தன்னல டயலாக். 5 முறை முதல்வராக இருந்த ஒருவர் சுயநல, குடும்பநல அரசியலை தோல் உறித்துக்காட்டிய டயலாக். சீ......இந்தப்பழம் எப்போதுமே புளித்தப் பழம் தான், பழத்தின் தோலைப் பார்த்து ஏமாந்துவிட்டதாக நடுநிலை அரசியல் ஆதரவாளர்கள் முகம் சுளித்த டயலாக்

3. தமிழர்களின் தனி நாடாக ஈழம் மலர்வதைத் தடுத்ததுடன், ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும், லட்சக்கணக்கானவர்களின் உடமைகளைப் பறித்த இராஜபக்சேவுக்கு பக்கத் துணையாகவும் இருந்து, இராணுவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தந்த காங்கிரசின் கைக்கூலியாக மந்திரிப்பதவிகளைப் பெற்றுக் கொண்டு இனத் துரோகம் செய்ததற்காக

4. பரபரப்புக்காகவும், அரசியல் வெற்றுப் புகழ்ச்சிக்காகவும் வெறும் மூன்றே மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்கள் நல்வாழ்வு பெற்றுவிட்டார்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டதற்காக

5. உலக தமிழ் மாநாடு வழிகாட்டுதல்களை மீறி, தனக்கு வரலாறு படைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு பணத்தை செலவு செய்து 'முதல் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மொத்த தன் குடும்பத்தையும் அழைத்து மாபெரும் குடும்பவிழாவை அரசு விழாவாகக் காட்டியது.

6. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ஊழலை ஒரு தமிழன் தான் செய்திருக்கிறான், செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்று ஒட்டு மொத்த பிற இந்தியர்களுக்கிடையே தமிழர்களுக்கு அவமானம் ஏற்படுத்தியதற்காக.

7. திரையுலகத்தை அக்டோபஸ் கைகளால் இறுக்கிப் பிடித்து இருப்பதற்காக

8. இலவச தொலைகாட்சிகளை கொடுப்பதன் மூலம் கேபிள் கட்டணம் அவசியம் ஏழைகள் செலுத்தியாகவேண்டும் என்ற கட்டாயத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருப்பதால் குடும்பத்திற்கு அரசு செலவில் பெரிய வருமானம் ஈட்டிய செயலுக்காக, அதாவது ஒரு கோடி (இலவச) தொலைகாட்சி (கொடுக்கப்பட்டு இருந்தால்) கேபிள் இணைப்பு X 12 மாதம் x 75 ரூபாய் கட்டணம் = ஆண்டுக்கு 900 கோடி - இது தலைவரின் குடும்பத்தின் ஒரு ஆண்டின் கேபிள் வருமானம்)

9. சீமான் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்களை காங்கிரசை குஷிப்படுத்த கைது செய்து சிறையில் அடைத்து ரசித்தது

10. மொத்தக் கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்தது மற்றும் கட்சியில் குடும்பத்தினரின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம்.



இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த காரணங்கள், மீடியாவை வைத்துக் கொண்டு ஈழப் போரின் போது பொதுமக்களுக்கு செய்திகளே போய் சேராமல் தடுத்தார்கள்.



இவையெல்லாம் தெரிந்தும் தமிழகத்தின் சிறுபான்மை மதப்பிரிவினர் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு (இனிமேல்) கிடைக்குமாம். கிறித்துவர்கள் சார்பில் சொல்லுகிறார்கள் ஜெ கட்டாய மதமாற்றம் தடைச் சட்டம் கொண்டு வந்தார். திமுக சிறுபான்மை காவலனாக இருப்பது இப்படித்தான். ஐந்து முறை முதல்வராக இருந்தவர் இனிமேல் தான் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பாராம். அந்தம்மாவே போட்டு அந்தம்மாவே தூக்கிய கட்டாய மதமாற்றச் சட்டம் இன்னும் கிறித்துவர்களை பயமுறுத்துகிறதாம், அப்படி என்றால் இராமேஷ்வரம் கிறித்துவ மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கட்டுப்படுத்துவதும், காயப்படுத்துவதும், சுட்டுப்போடுவதும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கமாக இருக்கும் திமுகவை ஆதரிப்பதால் சரி ஆகிவிடுமா ?





திமுக கூட்டணிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவாம். ஏன் என்றால் அந்தம்மா ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியது. என் போன்றோர் கை தட்டி வரவேற்றோம். காரணம் தாம் மக்கள் ஊழியர்கள் என்ற நினைப்பே இல்லாமல் உதவிக்கு விண்ணப்பிக்க வரும் பொது மக்களை நாயிலும் கேவலமாக நடத்தியவர்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அணுப்பிய போது பொதுமக்கள் பெரிதாக எதுவும் போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து. அரசு வேலை நிரந்தரமானது அல்ல, தவறு செய்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவோம் என்கிற நினைப்பை ஜெ அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தினார், பொதுமக்களால் வரவேற்கத்தக்கது தானே.



சிறுபான்மை காவல் என்ற போர்வையில் ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையை சிறுபான்மையினர் எடுப்பது, நாளை பெரும்பான்மை மதத்தினர் நாமும் ஏன் மத அடிப்படையிலேயே கட்சி ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது என்ற முடிவுக்குத் தள்ளிவிடும். அந்த வாய்ப்புகளுக்காகத்தான் இந்து மதவாத சக்திகளும் கூடக் காத்திருக்கின்றன.



திமுக அரசியல் மூலமாக சம்பாதித்து போதும், அந்தம்மா ஜெ தான் தற்போது பரம ஏழை :). தமிழக அரசியலில் மாற்று சக்திகள் தலையெடுக்காதவரை ஒரே கருமாந்திரத்தை தொடர்ந்து உட்காரவைப்பதைவிட கருமாந்திரத்திற்கு மாற்றான மற்றொரு கருமாந்திரத்தைத் சட்டசபைத் தலைமைக்கு அனுப்புவதன் மூலம் தொடர் கொள்ளையில் ஒரே குடும்பம் ஈடுபடுவதையாவது, சர்வாதிகரிகளாக ஆவதைத் தடுக்கமுடியும் என்கிற காரணமும் நம்பிக்கையும் வெளிப்படையானது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதே அறிவார்ந்த மற்றும் தமிழகத்திற்கு ஓரளவு நன்மையாக அமையாவிட்டாலும் கொடுதல்களை ஓரளவு தடை போட முடியும்.



இந்தத் தேர்தலில் என்னுடைய திமுக கூட்டணிக்கான எதிர்ப்பையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான காரணங்களையும் நான் இங்கே பதியவைத்துவிட்டேன்.



சமூக மற்றும் தமிழுணர்வாளர்களின் நல் உணர்வுகள் இந்தத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.


****
KULALI
திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள்


http://kuzhali.blogspot.com/2011/04/10.html
 
 
 
**



5 comments:

  1. யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

    யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

    தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

    போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

    பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

    தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

    30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

    செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

    டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

    சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

    சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

    வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

    மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

    ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

    கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
    ௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

    பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
    பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
    கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

    சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
    மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

    ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
    பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

    பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

    சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

    மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

    சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

    சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?

    ReplyDelete
  2. யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

    யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

    தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

    போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

    பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

    தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

    30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

    செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

    டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

    சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

    சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

    வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

    மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

    ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

    கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
    ௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

    பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
    பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
    கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

    சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
    மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

    ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
    பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

    பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

    சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

    மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

    சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

    சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?

    ReplyDelete
  3. அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
    இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
    யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
    உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
    ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
    அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

    நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...