Thursday, August 07, 2008

குசேலன் என்றொரு குழப்பவாதி







முதலில் ஒரு ஜோக்

சென்றமுறை மத்தியில் தேர்தல் நடந்த போது பாஜக-வுக்கு தான் என் ஓட்டு என்று ரஜினி வாய்ஸ் கொடுத்தார்(ராமதாசுடன் நடந்த சண்டை காரணமாக)
எல்லா தொகுதியிலும் அபாரமாக பாஜக தோல்வியடைந்தது.அந்த சமயத்தில் நான் படித்தது...


இடம் : ரஜினியின் வீடு

வேகமாக ஓடி வருகிறார் உதவியாளர்
ரஜினி : எம்பா இவ்வளவு வேகம்?
உதவியாளர் : அந்த் ___ கட்சியின் முக்கிய தலைவர்கள் உங்களை பார்க்க வந்திருக்காங்க..
ர : ம்ம்ம்ம்ம்ம்ம் வந்துட்டாங்களா???? இவங்களுக்கு பயந்துதான் இமயமலைக்கு போனேன்,இப்பத்தான் வந்தேன்,வந்தது தெரிஞ்சது வண்டிகட்டிக்கிட்டு வந்துட்டாங்களே?????!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம் வரச்சொல்லு

வந்தவர்கள் வணக்கம் சொன்னவுடன்
ர : வணக்கம்,கவலை படவேண்டம் நாளைக்கே பத்திரிக்கைகாரர்கள் கூப்பிட்டு உங்களுக்குத்தான் என் ஆதரவுனு சொல்லிடுறேன் - என்று ரஜினி முடிக்கும் முன்பே வந்தவர்கள் அனைவரும் ரஜினியின் காலில் விழ,அதிர்ந்துபோன ரஜினி "ஏன்" என்று கேட்க
வந்தவர்கள் "ஐயா , தயவுசெய்து அப்படி செய்துடாதிங்க,எதிர் கட்சிக்குதான் உங்க ஆதரவு என்று மட்டும் பேட்டி கொடுங்க நாங்க தன்னால ஜெய்ச்சுடுவோம் என்று கூறினார்களாம்...................
...........................

இப்ப விசயத்துக்கு வருவோம்
எங்க தெளிவா பேசினா ரசிகர்களுக்கு புரிந்துதொலந்து கேள்விகேட்டுவிடுவார்களோ என்று குழப்பி பேசுவதே ரஜினி ஸ்டைல்
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்கலாம்.

இப்ப வந்துள்ள குசேலன் காமெடியை பார்ப்போம்
படத்தில் ஒரு காட்சியில்
“அது என்னங்க அது? அரசியலுக்கு வருவேன்றீங்க? ஆனா இப்ப இல்லை.. எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்ங்குறீங்க? மீறி கேட்டா மேல கை காட்டுறிங்க (சமிபத்தில் விஜய் டீவி நிகழ்ச்சி ஒன்றில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு விஜய்யும் இதையெத்தான் செய்தார்-கெளம்பிடார்யா அடுத்த சூப்பர் ஸாரு)
என்னங்க இது?” என்ற கேள்விக்கு ரஜினியளிக்கும் பதில்
" அது இயக்குனர்கள் எழுதிய வசனத்தை நான் பேசினேன் நீங்க தப்பா எடுத்துகிட்டா நான பொறுப்பு" என்று கூறுகிறார்..
ஆக இதுவரை திரையில் அவர் பேசியதெல்லாம் எவரோ ஒருவர் எழுதியது. அந்த வசனங்களி வைத்து இத்தனை வருடங்கள் கும்மியடித்த ரசிக(பக்த)மணிகள் மற்றும் பத்திரிகைகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. எல்லாம் அவர்களின் முட்டாள் தனம் என்று ரஜினி கூறிவிட்டார்

"அதுதான் தெளிவா சொல்லிட்டாரே அப்புறம் என்ன?"-என்றுதானே கேட்குறிங்க???? அங்கதானே குழப்பம் ,அதாவது அடுத்த படத்தில் "குசேலனில் நான் பேசியது வாசு எழுதியது அதை நீங்க நாம்பினா நான பொறுப்பு? "-என்று கூறுவாறோ என்பதுதான்.


ரஜினியின் பேச்சு




இல்லயென்றால் இங்கே செல்லவும்



/////////////ஒரு நல்ல கதைகருவை மலையாளத்தில் சிற்பமாக்கி.. கோயிலில் வைத்தனர்..அதை தமிழில் எடுத்து.. தெருவில் வைத்து.. மசாலா தடவிரசிகர் மன்றம் அமைத்து விழா எடுத்து விட்டு திரும்ப கோயிலுக்குள் வைத்து விட்டனர்..
சொந்தமான கதை எடுத்து அதில் சில குறைகள் என்றால் மன்னிக்கலாம் எடுப்பது ரீமேக் அதில் ஒரிஜினலில் உள்ள குறைகளை களைய தான் வேண்டும்..ஆனால் அதை இவருக்காக இப்படி தான் எடுக்கனும் என்றால்.. அப்படி ஒரு கதையை உருவாக்கி அதை செய்திருக்கலாம்... மேலும் நிறைய குறைகளை சேர்க்க கூடாது..காப்பி அடித்தாலும் ஒழுங்காக காப்பி அடிக்கனும்/////////////////////
மற்றொரு தளத்தில் குசாலன் பற்றி ஒரு நன்பரின் கருத்து




16 comments:

  1. விமர்சனம்


    குசேலன்


    ஐஸ்கிரீம் வண்டியில் ஆலயமணியை கட்டிய மாதிரி எளிமையான கதையில் காஸ்ட்லியான ரஜினி. எத்தனை நாளாச்சு, இப்படியொரு ரஜினியை பார்த்து. அற்புதம்!

    சின்ன வயதில் சேர்ந்து படிக்கும் நண்பர்களில் பசுபதிக்கு பாத்தியப்பட்டது பரிதாப சலூன் மட்டுமே. ஆனால் ரஜினி? ஊர் உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார். காதலியோடு ஊரைவிட்டு ஓடி வந்த பசுபதி, எங்கோ ஒரு கிராமத்தில் மர நாற்காலியும் மக்கிப்போன கடையுமாக வாழ்க்கையை நடத்துகிறார். அன்றாட சோற்றுக்கே அல்லாடுகிற பசுபதிக்கு, அதே ஊரில் படப்பிடிப்புக்கு வரும் சூப்பர் ஸ்டாரை பார்க்க கொள்ளை ஆசை. ஆனால் டைட் செக்யூரிடி, தள்ளுமுள்ளுகளில் நண்பனை எட்டி நின்று கூட முழுசாக பார்க்க முடியாத சூழல். பக்தனை தேடி பரந்தாமனே வந்த மாதிரி பசுபதி வீட்டிற்கே ரஜினி வருகிறார். இந்த கடைசிநேர க்ளைமாக்சை உருப்படியாக பார்க்க முடியாதபடி உருண்டு நிற்கிறது கண்ணீர்.

    பசுபதிக்கு முதல் ஷொட்டு. ஊரே திரண்டு வந்து சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று கொண்டாடும் போதும், தாழ்வு மனப்பான்மையால் ரஜினியை நெருங்க முடியாமல் தவிக்கும் போதும் பசுபதி பதறவைக்கிறார். அவரது கண்கள் சொல்லும் ஆயிரம் உணர்ச்சிகளுக்கு டயலாக்கே தேவையில்லை. ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு பயந்து எங்காவது போயிடலாம் என்று மனைவியை அழைக்கும்போது, அந்த இயலாமை பதற வைக்கிறது.

    கழுவி துடைத்து வைத்த குத்து விளக்கு போலிருக்கிறார் மீனா. அழுக்கு குடிசைக்கு சம்பந்தமில்லாத தோற்றம். ஆனாலும், கணவனே கண் கண்ட தெய்வமாக மதிக்கும் அந்த குணமும் அவரைப்போலவே பளிச்!

    செட்டப் போலீஸ் உதவிடன் பலரையும் கடத்தி வந்து மொட்டையடிக்கும் வடிவேலு, அந்த ஊருக்கு வரும் டி.எஸ்.பி யையே மொட்டையடிப்பது வெடிச்சிரிப்பு. ரஜினியை சந்திக்க அவர் செய்யும் பகீரத பிரயத்தனங்கள் கிச்சுகிச்சு. ஆனாலும் சொந்த பெண்டாட்டியை திருட்டுத்தனமாக சைட் அடிக்கும் காட்சி உவ்வேய்... இதுவாவது பரவாயில்லை. நயன்தாரா உடை மாற்றும் காட்சியில் வடிவேலுவின் மீசை சுட்டிக்காட்டுவது எதை?

    ஆர்.சுந்தர்ராஜனின் அலட்டலை ரசிக்க முடிகிறது. இவரைக் கொண்டே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ரஜினி சொல்லும் விளக்கத்தில் எக்கச்சக்க கோபம் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நியாயம்தான்!

    மியூசியத்தில் வைத்த மெழுகு பொம்மையாக நயன்தாரா. ரஜினி படமாக இருந்தாலும் நயன்தாராக்கள் 'நெஞ்சு' நிமிர்த்தினால்தான் நிம்மதி!

    கூட்டி கழித்துப் பார்த்தால் அறுபது நிமிடங்களே வருகிறார் ரஜினி. ஆனாலும் அவரை படம் முழுக்க நிரப்பி, ஒரு புது டிரெண்டையே நிறுவியிருக்கிறார் பி.வாசு. க்ளைமாக்சில் கண்கலங்கும் ரஜினியும், அவர் பேசும் வசனங்களும் நட்புக்கு போடுகிற உரம். மாதா, பிதா, குரு, நண்பன், பிறகுதான் தெய்வம் என்கிறாரே, விசில் பறக்கிறது தியேட்டரில். ரஜினி படத்தில் என்னென்ன இருக்குமோ எல்லாம் இருக்கிறது. இருந்தும் ஒரு ஃபைட் கூட போடாத ரஜினி, கொம்பு சிலுப்பாத முரட்டுக்காளை.

    விருந்தில் இசையும், ஒளிப்பதிவும் திகட்ட திகட்ட சுவை! ஜி.வி.பிரகாஷ், அரவிந்த் கிருஷ்ணாவுக்கு தனி பாராட்டுகள்.

    பி.வாசுவின் ஹிட் லிஸ்ட்டில் சந்திரமுகி மெகா என்றால், குசேலன் ஆஹா!!

    T.R.MURUGESAN DME

    ReplyDelete
  2. வாங்க முருகேசன்
    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. யார் எப்படி எழுதினாலும், அடுத்த ரஜினி படம் வரும்போது இந்த லூசுகள் க்யூவில் நிற்பார்கள்.

    ReplyDelete
  4. யார் எப்படி எழுதினாலும், அடுத்த ரஜினி படம் வரும்போது இந்த லூசுகள் க்யூவில் நிற்பார்கள்.

    ReplyDelete
  5. குசேலனில் வரும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டும்படி ரஜனி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா அறிவித்திருக்கிறார் என இணையம் ஒன்றில் செய்தி வெளிவந்திருக்கின்றது.

    ReplyDelete
  6. அவர்களையெல்லாம் திருத்தவே முடியாது
    நன்றி கயல்விழி

    ReplyDelete
  7. ரஜினியை திட்டி திட்டியே பதிவு போடும் நீங்கள் ஏன் ரஜினி அற்புதமாக யதார்த்தமாக நடித்த கடைசி காட்சியை
    புகழ்ந்து ஒரு நடிகராக அவரை பாராட்ட கூடாது?

    ReplyDelete
  8. ரஜினியை திட்டி திட்டியே பதிவு போடும் நீங்கள் ஏன் ரஜினி அற்புதமாக யதார்த்தமாக நடித்த கடைசி காட்சியை
    புகழ்ந்து ஒரு நடிகராக அவரை பாராட்ட கூடாது?////////////////

    அய்யா ரஜினியை பாரட்டாமல் இல்லை,,,பழைய படங்கள் சிலவற்றில் ரஜினி நடித்த காட்சிகளை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன்."அவர்கள்"--படத்தில் மிக அருமை.
    ஆனால் காலப்போக்கில் ரஜினி படங்கள் எனக்கு ஒரு மெகாசிரியல் நாடகம் பார்ப்பதுபோல தோன்றுகிறது.என் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.
    குசேலன் கடைசி காட்சியும் அப்படித்தான்

    (ஆமா ரசினியை புகழ்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் ஏன் அனானிமஸ்-ஆக இருக்கிறார்கள-பாவம் முகவரி இல்லாதவர்கள்)

    ReplyDelete
  9. Hi prabhu,
    kuselan endrathum yetho pazhaya kuselan kathayoda re-mix kavithai maari yezhuthi iruppeengannu nenachen. :) rajinya vuttudalaam.

    namakkunu oru buththi irunthaal, naam yen ippadi thirai pada nadigargal pin yellaam oodap pogirom.

    rajini yoda nadippai vittudalaam. yaar ippa ozhunga nadikkaraanga?

    yethaartham nu peru vachikittu vanmuraigal, aabaasangal thaane kaattaraanga.

    naama ippadi kodukkira ore adiyaana thittukkalum , paaraattukkalum , gavanippugalum thaan thirai ulaga super star galai uruvaakkuthu. avangalai naama kandukkave illainaa ????

    sorry thappa irunthaal manichukonga. apparam unga kavithaigal yellam padichuttu varen. romba nice. keep going.

    -janu

    ReplyDelete
  10. உங்கள் கருத்துக்கு நன்றி ஜானு

    ReplyDelete
  11. http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/19-rajinikanth-fans-enthiran-sholinger.html

    ReplyDelete
  12. Saw the video. என்ன ஒரு பயித்தகாரத்தனம். திருந்தவே மாட்டார்களா???????

    ReplyDelete
  13. Geetha Ravichandran said...
    Saw the video. என்ன ஒரு பயித்தகாரத்தனம். திருந்தவே மாட்டார்களா???????
    ////

    NO CHANCE

    ReplyDelete
  14. Geetha Ravichandran said...
    Saw the video. என்ன ஒரு பயித்தகாரத்தனம். திருந்தவே மாட்டார்களா???????
    ////

    NO CHANCE

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...