Saturday, April 05, 2014

தேர் திருவிழாவில் சண்டை...

     தொட்டியம் தேர் திருவிழாவில் சண்டையாம்(05-04-2014)..சாதி தான்.. தேரு ஓரமா நிக்கிது போல.. எங்க ஊருல(Pothanur - பொத்தனூர்)  ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு..அதுக்கு பாவம் முழுசா விழா போட்டு 20 வருசம் மேல இருக்கும்..அப்போ தேர் வரும் வீதி வைத்து ஜாதி சண்டை..அதன் பின்னனியை பார்த்தல் சில தனி குழுக்களின் சண்டைதான் ஆன அவன் இவனை அடிச்சுட்டானு சொன்னா அது தனிச்சண்டை..அதையே இந்த சாதிக்காரன் அந்த ஜாதிக்காரனை அடிச்சுட்டானு சொன்னா அது சாதிச்சண்டை சும்ம குபுகுபுன்னு எரியும்..அப்படித்தான் ஆச்சு..அப்புறம் போலிசு வந்து ஊரடங்கு போட்டு..ம்ம் ஆச்சு 20 வருசம் மேல..இடையில 10-12 வருசம் முன்பு ஒருக்கா பாதி திருவிழா நடந்துச்சு ஆனாலும் முழுசா முடிக்கல.ந்த மனுசபய சண்டைக்கு சாமி என்ன செய்யும்னு சிலரு கேட்கலாம்..ஆமா ஆமா சாமி என்ன செய்யும்.. தன்னைவிட சக்தி வாய்ந்த மனுசன்கிட்ட மோத சாமியால முடியுமா என்ன..:))  

          இப்ப வேற வழியில்லாம புதுசா ஒரு மாரியம்மன் கோவில் கட்டி கும்பாவிசேகம் முடிச்சுட்டாங்க... வரும் 28ஆம் தேதி காப்புகட்டி மே மாதம் திருவிழான்னு தகவல் வந்திச்சு..மே மாதம் 1 முதல் 18 வரை அங்கே போக முன்பே திட்டமிட்டு இருந்தேன்,அந்த தேதியில் ஊர் திருவிழா வந்தால் மிக்க மகிழ்ச்சி..ம்ம் பார்க்கலாம்..தொட்டியத்தில் நடக்கும் சண்டை இதையெல்லாம் நினைக்க வச்சிடுச்சு..

 என்னுடைய பழைய பதிவு.. 

உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்து புட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை 
காவலுக்கு நிக்குதய்யா

http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html
 பிரியமுடன் பிரபு ...

No comments:

Post a Comment

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...