Monday, October 29, 2012

மின்வெட்டு-அரசியல் அடிமைகள்- துப்பாக்கி(விஜய்)

          மின்வெட்டு மெல்ல மெல்ல உயர்ந்து இப்போ 16 மணி நேரம்னு இருக்கு..(நல்ல முன்னேற்றம்டே). எல்லாத் தொழில்களுக்கும் மின்சாரம் முக்கியம் இப்படி மின்வெட்டு இருந்தால் முதலாளிகள் என்ன செய்வார்கள் ? இழுத்து மூடுவார்கள், அவற்றை நம்பி இருந்த மக்களின் கதி ?

          காலகாலமா விவசாயம் செய்துவந்த குடும்பங்களின் இந்த தலைமுறையினர் தண்ணீர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மெல்ல மெல்ல விவசாயத்தை விட்டுவிட்டு ஈரோடு-கோவை-சிவகாசி-ஒசூர் என தொழில் நகரங்களின் வேலைக்குச் சென்றனர். இப்போது டெக்ஸ்டைல், சாயபட்டரை, அச்சகங்கள், லேமினேசன் தொழில், கட்டிங், ஸ்கோரிங் மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தீபாவளி சீசனுக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு பேக்கிங், கிப்ட் பாக்ஸ்கள் தயாரிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யமுடியாமல் சொந்த ஊரில் இருந்து பிழைக்கபோனவர்கள்  இப்போது அங்கும் பிழைக்க வழியின்றி செய்து வருகிறது அரசாங்கம்.சென்னையில் மட்டும் ஏன் குறைவான (1 மணி நேரம்) மின்வெட்டு என தெரியவில்லை.

          திமுக-அதிமுக என்ற இரண்டு பெரிய கம்பெனிகளின் அடிமைகளாய் தொடர்ந்து இருந்துவரும் தமிழகம் இன்னும் என்ன என்ன சிக்கல்களை சந்திக்க போகிறதோ !.  சினிமாவும் , பேசியே ஏமாற்றும்  ஆற்றலும் கொண்ட அந்த இரண்டு கம்பெனிகளின் தலைவர்களும், அவர்களின் அடிபொடிகளும்  கோடிகளை சேர்த்துக்கொண்டிருக்க எங்கட்சி ஒசத்தி உங்கட்சி ஒசத்தின்னு பேசிக்கிட்டு திரியுதுங்க அவர்களின் அடிமைகள். நாசமா போங்கடே..

()

http://www.youtube.com/watch?v=zXzW11lDtqY


           துப்பாக்கி - டிரைலர் பார்த்தேன்..நல்லாத்தான் இருக்கு. என்ன... எப்பவுமே விஜய்  சீரியசா வசனம் பேசினா  திரையரங்கில் சிரிப்புச்சத்தம்தான் கேட்கும்.. இதுல இங்கிலிபிசு வேற.. (சிரிப்பு [போலிச இருப்பாரோ ?)  எல்லாம் முருகதாஸ் கையில இருக்கு. :)




என்றும் பிரியமுடன் பிரபு..

.

1 comment:

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...