Wednesday, January 20, 2010

புத்தகம்- நிலமெல்லாம் ரத்தம்(nilamellam raththam)



இது என் 50 வது
பதிவு







.
ஆசிரியர்: பா.ராகவன்
விலை: ரூ. 300

புத்தகம் படிப்பது எனக்கு பிடித்த விசயம் . பதிவர்கள் பலர் தான் படித்த புத்தகங்களை பற்றி எழுதுவது எனக்கு பிடிக்கும் , அதில் பல புத்தகங்களை குறித்து வைத்து வாங்கி படிப்பேன் . அதே போல நான் படித்த பின் அவற்றை பற்றி எழுதனும் என்று நீண்டநாளாக நினைத்துகொண்டிருக்கிறேன்.ஆனால் ஏனோ தட்டச்சு செய்து வைத்தவைகளை கூட பதிவிடாம
ல் விட்டுவிட்டேன்.இதுவே முதல் பதிவு
நிலமெல்லாம் ரத்தம்” – இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்ச
னை பற்றியது, இதை பற்றி நன்பர் ஒருவர் சொன்னார் ,பிறகு ஒருமுறை இந்தியா சென்ற எனது நன்பர் எனக்காக தேடி இந்த புத்தகம் வாங்கி வந்தார். படித்து வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை
அது ஏதோ இரு நாடுகளின் எல்லை பிரச்சனை என்று நினைப்பவர்களுக்கும், அப்பிரச்சனை பற்றி இதுவரை தெரியாதவர்களுக்கும்கூட தெளிவாக புரியும் வண்ணம் விளக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர். 703 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது . அதற்க்கு காரணம் உண்டு . இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை அரசியலும் மதமும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு ,இப்படி சேரக்கூடாத இரண்டு சேர்ந்ததால் வந்த விளைவு . எனவே இதை புரிந்துகொள்ள வேண்டுமாயின் அந்த அந்த காலகட்ட அரசியல் நிலையையும் , மற்றும் இதில் சம்மந்தபட்ட யூத,கிருத்துவ,இஸ்லாமிய மதங்கள் பற்றியும் ஒரு தெளிவு வேண்டும். எனவே தான் ஆசிரியர் அந்த மதங்களின் வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் முடிந்த அளவுக்கு அலசியுள்ளார். அந்த மதங்களை பற்றி எனக்கு இதற்க்கு முன்பு அதிகம் தெரியாது

மோசோ தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்ட ,நீர் பிளந்து நடுவில் வெட்டாந்தரை உருவாக அதில் இஸ்ரவேல் புத்திரர்கள் நடந்து போனார்கள்என்று புராதன ஆவணத்தை சுட்டி காட்டி புத்தகம் தொடங்குகிறது .இப்படி புராதன காலம் ஆரம்பித்து கிட்டதட்ட 2005 வரையாக உலகின் பல முக்கிய நிகழ்வுகள் கொஞ்சமேனும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை ஒளிந்துள்ளது
அதை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் படிக்கவும்
ஒரு நாவலை போல (அவர் நாவலாசிரியரியரும்தான்) அழகாக சொல்லியுள்ளார்

இந்த புத்தகம் பற்றிய கிருஷ்ணா பிரபுவின் பதிவு http://online-tamil-books.blogspot.com/2009/03/nilamellam-raththam-pa-raghavan.html


மீண்டும் சந்திப்போம் பிரியமுடன் பிரபு ...

(ஓட்டு போட்டே ஆகனும்)



........................
........................
Hi priyamudanprabu,

Congrats!

Your story titled 'நிலமெல்லாம் ரத்தம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st January 2010 09:00:20 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/172501

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish டீம்
................
................

ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி


.
.


22 comments:

  1. சுறுக்கமா தெளிவா சொல்லீட்டீங்க பிரபு.

    ----------------------

    நாவல்களை மட்டுமே படிக்க பிடித்த எனக்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் வகையில் முதன் முதலில் அறிமுகமான புத்தகம் இது தான். மாமாவிற்காக ஆஸ்பத்திரியில் 2 வாரங்கள் தங்க நேர்ந்த போது அறிமுகமானது, நம்பிக்கையற்றும்(ஆசிரியரின் நேர்மை) விருப்பமற்றும் படிக்க துவங்கினேன் - முடித்த பின் இன்னுமொரு பிரதி வாங்கி நண்பருக்கு அனுப்பி வைத்தேன்.

    தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டேன், இதற்கு பின் பா.ரா வும் நான் தேர்தெடுக்கும் நூலாசிரியர்களில் ஒருவரானார்.

    ReplyDelete
  2. ////
    நட்புடன் ஜமால் said...

    சுறுக்கமா தெளிவா சொல்லீட்டீங்க பிரபு.

    ----------------------

    நாவல்களை மட்டுமே படிக்க பிடித்த எனக்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் வகையில் முதன் முதலில் அறிமுகமான புத்தகம் இது தான். மாமாவிற்காக ஆஸ்பத்திரியில் 2 வாரங்கள் தங்க நேர்ந்த போது அறிமுகமானது, நம்பிக்கையற்றும்(ஆசிரியரின் நேர்மை) விருப்பமற்றும் படிக்க துவங்கினேன் - முடித்த பின் இன்னுமொரு பிரதி வாங்கி நண்பருக்கு அனுப்பி வைத்தேன்.

    தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டேன், இதற்கு பின் பா.ரா வும் நான் தேர்தெடுக்கும் நூலாசிரியர்களில் ஒருவரானார்.
    ///

    வாங்க ஜமால்
    படிச்சாச்சா
    எனக்கு நிறைய புதிய விடயங்கள் தெரிந்துகொண்டேன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல விஷயங்களை நீங்கள் படித்து மற்றவர்ளுக்கும் கூறும் இந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு நண்பரே... படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது.

    ReplyDelete
  5. அதை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் படிப்பேன்

    ReplyDelete
  6. ////////
    kumar said...

    நல்ல விஷயங்களை நீங்கள் படித்து மற்றவர்ளுக்கும் கூறும் இந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்
    ////////////


    நன்றி குமார்

    ReplyDelete
  7. ///
    க.பாலாசி said...

    நல்ல பகிர்வு நண்பரே... படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது.
    /////

    நன்றி பாலாஜி

    ReplyDelete
  8. negamam said...

    அதை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த புத்தகம் படிப்பேன்
    ////

    வாங்க பாலா

    ReplyDelete
  9. நிச்சயம் படிக்கனும், காதல் கதையும், கவிதைகளுக்கும் அப்பால் நிறைய இருக்கு தேடிப்பிடிக்கனும்..

    கிடைத்தால் எனக்கு ஒரு பார்சல்

    ReplyDelete
  10. அபுஅஃப்ஸர் said...

    நிச்சயம் படிக்கனும், காதல் கதையும், கவிதைகளுக்கும் அப்பால் நிறைய இருக்கு தேடிப்பிடிக்கனும்..

    கிடைத்தால் எனக்கு ஒரு பார்சல்
    ////

    நன்றிங்க . தேடி பாருங்க அனேக இடங்களில் கிடைக்கும்

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி பிரபு

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு. படிக்க ஆவலாயிருக்கு. இத்தகைய நல்ல
    ஆனால் பெரீரீரீய புத்தகங்களைப் படிக்கும் நாள் இப்போதைக்கு கிட்டாது போலிருக்கிறது.

    ReplyDelete
  13. அன்பின் பிரபு

    பகிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. ஆ.ஞானசேகரன் said...

    பகிர்வுக்கு நன்றி பிரபு
    ///

    நன்றி

    ReplyDelete
  15. Dr.எம்.கே.முருகானந்தன் said...

    நல்ல பகிர்வு. படிக்க ஆவலாயிருக்கு. இத்தகைய நல்ல
    ஆனால் பெரீரீரீய புத்தகங்களைப் படிக்கும் நாள் இப்போதைக்கு கிட்டாது போலிருக்கிறது.
    ///////
    மருத்துவர் நிறைய வேலை இருக்கலாம்

    நேரம் கிடைத்தால் படிக்கவும்

    ReplyDelete
  16. Blogger cheena (சீனா) said...

    அன்பின் பிரபு

    பகிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள்
    ////////

    நன்றி அய்யா

    ReplyDelete
  17. புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது. பா ராவின் உரைநடை அவ்வளவு அழகாக இருக்கும். அவருடைய மற்ற புத்தகங்களையும் படித்துப் பாருங்கள் பிரபு. அருமையாக இருக்கும்.

    என்னை பரிந்துரைத்ததற்கு நன்றி...

    ReplyDelete
  18. ...
    கிருஷ்ண பிரபு said...

    புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது. பா ராவின் உரைநடை அவ்வளவு அழகாக இருக்கும். அவருடைய மற்ற புத்தகங்களையும் படித்துப் பாருங்கள் பிரபு. அருமையாக இருக்கும்.
    //////

    நன்றி

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  20. வாழ்த்துகள் பிரபு தங்கள் 50ஆவது பதிவுற்கு. தொடருங்கள் :).

    ReplyDelete
  21. அன்புடன் மலிக்கா said...

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்..
    ////

    நன்றி

    ReplyDelete
  22. டுபாக்கூர்கந்தசாமி said...

    வாழ்த்துகள் பிரபு தங்கள் 50ஆவது பதிவுற்கு. தொடருங்கள் :).
    /
    /
    /
    /
    வாங்க கந்தசாமி

    ReplyDelete

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...