Monday, November 22, 2010

மணற்கேணி 2010 போட்டிகள் - முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 போட்டியைத் தொடர்ந்து மணற்கேணி 2010 அறிவித்திருந்தோம்,நிறைய கட்டுரைகள் வந்துகொண்டிருக்கிறது. அறிவிப்பின் படி போட்டிக்கான கட்டுரைகள் பெறும் இறுதி நாள் நவம்பர் 15 என்று அறிவிக்கபட்டு இருந்தது. நேற்றுவரை குறைந்தது பத்து  மின் அஞ்சல்கள் போட்டியின் இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டுகோள் வைத்து வந்தன. நீட்டிப்பதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு மணற்கேணி குழுவினர் ஒன்று கூடி வரும் டிசம்பர் 31 வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்.


இதன் படி மணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.

எழுத்தார்வலர்களும், பதிவர்களும் இந்த நீட்டிப்பை நல்வாய்ப்பாக பெற்று போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம்

சுட்டி:

முதல் மூன்று பரிசுகளாக மூவருக்கு சென்னை - சிங்கப்பூர் ஒருவார சுற்றுலா,

போட்டி விவரம், தலைப்புகள், பரிசு விவரங்களுக்கு மணற்கேணி - 2010 இணைய தளம்


ஒரு வேண்டுகோள்

மணற்கேணி போட்டி பற்றிய தகவல்கள் பலருக்கும் சென்றடைவதையும் பலரும் போட்டியில் கலந்துகொள்வதும் இதன் மூலமான ஆழமான எழுத்துகள் இந்த தமிழ் குமுகாயத்திற்க்கு கிடைக்க வேண்டுமென்பதால் உங்களிடம் ஒரு நன்கொடையை கேட்கிறோம், அந்த நன்கொடை மணற்கேணி பற்றிய போட்டியை உங்களுக்கு அறிந்தவர்களிடம் தெரிவிக்கவும், குழும மின்னஞ்சல்கள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், உங்கள் வலைப்பதிவுகள், இணையதளங்களில் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.
ஊடக அறிக்கை என்ற இந்த அறிக்கையை அச்செடுத்து(Print out) அருகில் உள்ள கல்லூரிகள், நூலகங்கள் மற்றும் இணையதள மையங்களுக்கு தந்து அதை அவர்களின் அறிவிப்பு பலகையில் இடச்சொல்லவும். ஊடக அறிக்கைக்கு இங்கே அழுத்துங்கள்

அன்புடன்
மணற்கேணி - 2010



.

2 comments:

வணக்கம்
என் பதிவை பற்றிய உங்கள் கருத்தை இங்கே இடுங்கள்

(தமிழில் எழுத )
http://www.google.com/transliterate/Tamil

You might also like:

Related Posts Plugin for WordPress, Blogger...